தற்போது வெளியாகி உள்ள பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் குறித்த தேர்ச்சி விகித விபரத்தை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டார்.
இதில் 94.5 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். சிவகங்கை மாவட்டம் 98.5 சதவீத தேர்ச்சியுடன் முதலிடத்தையும்,ஈரோடு மாவட்டம் 98.38 சதவீத தேர்ச்சியுடன் இரண்டாவது இடத்தையும், விருதுநகர் மாவட்டம் 98.26 சதவீத தேர்ச்சியுடன் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது.
பாடவாரியாக தேர்ச்சி விபரம்:
மொழிப்பாடம் | 96.42 % |
ஆங்கிலம் | 96.50 % |
கணிதம் | 96.18 % |
அறிவியல் | 98.47 % |
சமூக அறிவியல் | 96.75 % |
மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்:
சிவகங்கை | 98.50 % |
ஈரோடு | 98.38 % |
விருதுநகர் | 98.26 % |
கன்னியாகுமரி | 98.07 % |
ராமநாதபுரம் | 97.94 % |
மதிப்பெண் அடிப்படையில் முடிவுகள்:
481 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்கள் | 9402 |
451 - 480 மதிப்பெண்கள் பெற்றவர்கள் | 56,837 |
426 - 450 மதிப்பெண்கள் பெற்றவர்கள் | 64,144 |
401 - 425 மதிப்பெண்கள் பெற்றவர்கள் | 76,413 |
301 - 400 மதிப்பெண்கள் பெற்றவர்கள் | 3,66,084 |
201 - 300 மதிப்பெண்கள் பெற்றவர்கள் | 3,12,587 |
176 - 200 மதிப்பெண்கள் பெற்றவர்கள் | 26,248 |
175 மற்றும் அதற்கும் கீழ் மதிப்பெண் பெற்றவர்கள் | 38,682 |
இந்தாண்டு 5456 அரசுப்பள்ளிகள் தேர்வு எழுதியதில் மொத்தம் 1687 அரசுப்பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. கடந்த ஆண்டு 94.4 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்ற நிலையில் இந்த ஆண்டு தேர்ச்சி விகிதமானது கடந்த ஆண்டை விட 0.1 சதவீதம் அதிகரித்துள்ளது.
தேர்வு எழுதிய 9.5 லட்சம் மாணவர்களில் 8.97 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் தேர்ச்சி விகிதம் 96.4 சதவீதமாகவும், மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 92.5 சதவீதமாகவும் உள்ளது.
10 ஆம் வகுப்புத் தேர்ச்சியில் விருதுநகர் மாவட்டத்திற்கு மூன்றாவது இடம்!