11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் ஈரோடு மாவட்டம் முதலிடம்!

11ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் 97.3 சதவிகிதம் பெற்று ஈரோடு மாவட்டம் முதலிடம் பெற்றுள்ளது.

By Kani

கடந்த மார்ச் 7ஆம் தேதி முதல் ஏப்ரல் 16ஆம் தேதி வரை நடைபெற்ற 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை தமிழகத்தில் 8 லட்சத்து 62 ஆயிரம் பேர் எழுதினர். இந்நிலையில், 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு இன்று காலை வெளியிடப்பட்டுள்ளது.

11ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் 97.3 சதவிகிதம் பெற்று ஈரோடு மாவட்டம் முதலிடம் பெற்றுள்ளது. திருப்பூர் 96.40 சதவிகிதம் பெற்று இரண்டாம் இடமும், 96.20 பெற்று கோவை மாவட்டம் மூன்றம் இடத்தையும் பெற்றுள்ளன.

11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் ஈரோடு மாவட்டம் முதலிடம்!
  • 500 மதிப்பெண்ணுக்கு மேல் வாங்கியவர்கள் - 30,380 பேர்
  • 451 - 500 வரை மதிப்பெண் பெற்றவர்கள்- 64,817 பேர்
  • 426 - 450 வரை மதிப்பெண் பெற்றவர்கள்- 48,560 பேர்
  • 401 - 425 வரை மதிப்பெண் பெற்றவர்கள்- 61,369 பேர்
  • 351 - 400 வரை மதிப்பெண் பெற்றவர்கள்- 1,60,581 பேர்

தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் கீழ்கண்ட இணையதளங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம். www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in

ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணம் இன்றி தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம் என மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TN Plus One Result 2018 Live: Direct links to check TN 11th Result 2018 on tnresults.nic.in
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X