அரசு நடத்தும் போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகளை நடத்த
தமிழக அரசின் முடிவு செய்துள்ளது. இதற்கு இளைஞர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் போட்டித் தேர்வு இலவச வகுப்பில் சேரலாம். கூடுதல் விவரங்களுக்கு https://www.cecc.in/ என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்து அறியலாம்.
தமிழகத்தில் அரசு துறை மற்றும் பொது துறைகளுக்கான போட்டித் தேர்வுகளுக்கு இலவச வகுப்புகள் நடத்துவது குறித்து திட்டமிட்டுள்ளதாக அரசு தரப்பில் தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழக அரசு துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கான பணியாளர்கள், ஊழியர்கள் அனைவரும் போட்டி தேர்வுகளின் மூலமாகவே நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். இதற்காக தனியார் மையங்கள் பயிற்சி வகுப்புகளை நடத்தி அதிக கட்டணம் வசூலித்து நடத்தி வருகிறது. இதனால் ஏழை மாணவர்கள் இந்த வகுப்பில் சேர முடியாத நிலை உள்ளது.

அதனால் போட்டி தேர்வர்களுக்கு உதவும் வகையில் தமிழக அரசு TNPSC, SSC, IBPS, RRB போன்ற தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளை இலவசமாக நடத்த திட்டமிட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
இந்த பயிற்சி வகுப்பில் இணைவதற்கு தேர்வர்கள் அனைவரும் ஜனவரி 29ஆம் தேதி முதல் பிப்ரவரி 12ஆம் தேதி வரை ஆன்லைன் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் www.cecc.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுன்றன.
பயிற்சி வகுப்புகள் தொடர்பான மேலும் விவரங்களுக்கு 044-25954905 / 044-28510537 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த திட்டம் இளைஞர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் இளைஞர்கள் பெரும் குஷியில் உள்ளனர்.


Click it and Unblock the Notifications












