தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வரும் நிலையில் இன்று முதல் 25ம் தேதி வரையில் காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டு ஆன்லைன் வகுப்புக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றினைக் கட்டுப்படுத்தும் விதமாக மார்ச் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில் சமீப மாதமாக ஆன்லைன் மூலம் வகுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், 2020-ஆம் கல்வி ஆண்டின் படி தற்போது காலாண்டு தேர்வுகள் முடிந்து விடுமுறை வந்திருக்கும். ஆனால், நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போதுதான் ஆன்லைன் வழியில் வகுப்புகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த ஆண்டு காலாண்டு, அரையாண்டுக்கு விடுமுறைகள் இருக்காது என மாணவர்கள் கருதிவந்தனர்.
ஆனால், மாணவர்களை மகிழ்விக்கும் வகையில் தற்போது காலாண்டு விடுமுறையினை பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. அதன்படி, இன்று முதல் வரும் செப்டம்பர் 25ம் தேதி வரையில் 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்குக் காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த விடுமுறைக் காலத்தில் பள்ளிகள் ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்தக்கூடாது என்றும் தமிழக பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications












