12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு! மாஸ் காட்டிய ஈரோடு மாவட்டம்!

தமிழக அரசு பாடத்திட்டத்தின் கீழ் நடைபெற்று முடிந்த 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கான முடிவு இன்று வெளியிடப்பட்டதில் அரசுப் பள்ளிகள் அளவில் அதிகபட்சமாக ஈரோடு மாவட்டம் 94.51 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற

தமிழக அரசு பாடத்திட்டத்தின் கீழ் நடைபெற்று முடிந்த 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கான முடிவு இன்று வெளியிடப்பட்டுள்ளது.

12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு! மாஸ் காட்டிய ஈரோடு மாவட்டம்!

தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவ, மாணவியர்களுக்கான பொதுத் தேர்வு கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. இதனிடையே கொரோனா நோய்த் தொற்றின் காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதினால் தேர்வு முடிவுகள் வெளியாவதில் காலதாமதம் ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில், இன்று (ஜூலை 16) காலை திடீரென 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில், தமிழகம் முழுவதும் இருந்து பள்ளி மற்றும் தனித் தேர்வர்கள் என மொத்தம் 7,99,171 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர். அதில், பள்ளி மாணவ, மாணவியர்கள் 7,79,931 பேர் தேர்வில் பங்கேற்றதில் 92.3 சதவிகிதம் பேர் தேர்ச்சியடைந்துள்ளனர்.

மேலும், மாநில அரசுப் பள்ளிகள் அளவில் அதிகபட்சமாக ஈரோடு மாவட்டம் 94.51 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TN 12th Results 2020 DECLARED: Erode district records the highest pass percentage
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X