பள்ளி மாணவர்களுக்கு மும்மொழிப்பாடத்திட்டத்தை கொண்டு வர மத்திய அரசு உத்திரவிட்டுள்ளது . இதனையடுத்து தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு மும்மொழி பாடத்திட்டத்தை கொண்டு வர தமிழக அரசு பரிந்துரைந்துள்ளது .

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான பாடத்திட்டங்கள் மாற்றும் பணி ஏற்கனவே நடைபெற்று வருகின்றது . நாடுமுழுவதும் பல்வேறு மநிலங்களில் மும்மொழி பாடத்திட்டங்கள் வழக்கத்தில் உள்ளது . இந்திய மொழியான இந்தி மற்றும் மாநில மொழி அத்துடன் ஆங்கிலம் கற்ப்பிக்கப்பட்டு வருகின்றது, சில மாநிலங்களில் இம்மொழியானது சிபிஎஸ்இயின் கீழ் பிரெஞ்சு ஜெர்மன் போன்ற அயல்நாடுகளின் மொழியும் கற்ப்பிக்கப்பட்டு வருகின்றது .
இந்நிலையில் தமிழகத்தின் மும்மொழி கல்வி கொள்கையை எவ்வாறு உருவாக்குவது என திட்டநிலை குழு சிந்தித்து வருகின்றது .மொழிவாரியாக மாணவர்களுக்கு மும்மொழிக்கல்வி கற்பிப்பது குறித்து ஆலோசனைகள் வழுத்து வருகின்றன.
ஐந்தாம் வகுப்பு முதல் மாணவரகளுக்கு தாய்மொழி கல்வி தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் கற்பிக்கலாம் அதன்பின் அவரவர் விருப்பங்களுக்கேற்ப மொழிகளில் படிக்க அனுமதிக்கலாமா என்ற எண்ணங்களும் பரிசீலினையில் உள்ளன. மத்திய அரசின் தேசிய கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனங்களும் மூன்று மொழி கல்விக்கொள்கையை வழங்க அரசுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.
தமிழ்மொழி கட்டாயமாக கற்க வேண்டும் அத்துடன் மாணவர்கள் மாணவர்களுக்கு இந்தி, அரபிக், சமஸ்கிருதம், தெலுங்கு, கன்னடம் என பிறமொழிகளில் ஏதாவது ஒன்றில் அரசு பள்ளிகளில் கட்டாயம் கற்பிக்க வேண்டும் எனவும் கூறப்படுகிறது.
இன்றைய பரந்துப்பட்ட உலக வாழ்வில் மாணவர்கள் மூன்று மொழி கொள்கையை கற்று கொள்வது அறிவு வளர்ச்சிக்கும் நிலைத்த தன்மைக்கும் உதவிகரமாக இருக்கும் . எங்கு சென்றாலும் நிலைத்திருக்கும் ஆற்றல் பெறலாம் . தாய்மொழியில் ஆர்வமும் அன்பும் சிந்திக்கும் திறன் ஒரு மாணவன் கற்றுகொண்டான் எனில் எந்த மொழியும் கற்பவனுக்கு எளிதாகும்.
சார்ந்த பதிவுகள்:


Click it and Unblock the Notifications












