திருவண்ணாமலையிலும் நாளை பள்ளிகள் திறக்கப்படும்.. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..!

கடும் வெயில் காரணமாக பள்ளிகள் திறப்பு ஜூன் 1ந் தேதியில் இருந்து 7ந் தேதிக்கு மாற்றப்பட்டது. திருவண்ணாமலையில் நாளை பள்ளிகள் திறப்பு.

திருவண்ணாமலை : கடும் வெயில் காரணமாக பள்ளிக்கூடங்கள் திறக்கும் தேதியை தமிழக அரசு தள்ளிப்போட்டது. திருவண்ணாமலையில் ஜூன் 15ந் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்த அறிவிப்பு ரத்து செய்யப்பட்டது. நாளை பள்ளிகள் திறப்பு என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் அனைத்தும் ஜூன் 1-ந் தேதி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் வெயில் தாக்கத்தினால் பள்ளிகள் திறக்கப்படுவது தாமதமாகும் என பெற்றோர்களும் மாணவர்களும் எதிர்ப்பார்த்தப்படி பள்ளிகள் 7ந் தேதி திறக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்தது. அதன் படி அனைத்து பள்ளிகளும் நாளை திறக்கப்படுகிறது.

திருவண்ணாமலையிலும் நாளை பள்ளிகள் திறக்கப்படும்.. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..!

அந்தந்த மாவட்டத்தில் உள்ள வெயிலின் தாக்கத்தைப் பொறுத்து மாவட்ட ஆட்சியர் பள்ளித் திறப்பை முடிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டது. அதன் படி திருவண்ணாமலையில் வெயிலின் தாக்கம் இன்னும் குறையாததால் மாவட்ட ஆட்சியர் ஜூன் 15ந் தேதி திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவித்தார். அந்த அறிவிப்பு இப்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. திருவண்ணாமலையிலும் நாளை பள்ளிகள் திறக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கோடை திருவிழா நாளை நடைபெறுவதால் அதன் காரணமாக நாளை ஒரு நாள் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஜூன் 8ந் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவிதுள்ளார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Schools will be opened tomorrow as the school education minister K.A. sengottaiyan has already announced.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X