பிளஸ்-2 தேர்வில் அரசுப் பள்ளிகளில் 86.87 சதவீதம் பேர் தேர்ச்சி...!

பிளஸ்2 தேர்வு முடிவு இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெளியிடப்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் 86.87 சதவீதம் பேர் தேர்ச்சி.

சென்னை : பிளஸ்-2 தேர்வில் தமிழ்நாடு முழுவதும் அரசு பள்ளிகளில் 86.87 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசுப் பள்ளி மாணவ மாணவியர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் மொத்தம் 92.1 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில் 94.5 சதவீதம் மாணவிகள் மற்றும் 89.3% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் 5.2% அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

1813 தனியார் பள்ளிகளும், 292 அரசுப் பள்ளிகளும் 100 சதவீத தேர்ச்சியினைப் பெற்றுள்ளது.

பிளஸ்-2 தேர்வில் அரசுப் பள்ளிகளில் 86.87 சதவீதம் பேர் தேர்ச்சி...!

பிளஸ்-2 தேர்வில் தமிழ்நாடு முழுவதும் அரசு பள்ளிகளில் 86.87 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாநகராட்சி பள்ளிகளில் 90.98 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

நகராட்சி பள்ளிகளில் 87.20 சதவீதம் மாணவ மாணவிகளும், பழங்குடியின பள்ளிகளில் 86.65 சதவீதம் மாணவ மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

சுயநிதி பள்ளிகளில் 97.77 சதவீதம் பேரும், ஆங்கிலோ இந்தியன் பாடதிட்டத்தின் கீழ் இயங்கும் பள்ளிகளில் 95.08 சதவீதம் பேரும், சுயநிதி மெட்ரிக் பள்ளிகளில் படித்த 96.06 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும் திருநங்கை ஒருவரும் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
86.87 percent of students in Tamilnadu examined in Plus Two examinations in government schools.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X