சென்னை : மத்திய கல்வி வாரியமான சிபிஎஸ்இயின் 10ம் வகுப்பு தேர்வு கடந்த மார்ச் மாதம் 9ந் தேதி தொடங்கி ஏப்ரல் 10ந் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வை இந்தியா முழுவதும் கிட்டத்தட்ட 16 ஆயிரம் பள்ளிகளைச் சார்ந்த 16 லட்சத்து 67 ஆயிரம் மாணவ மாணவிகள் எழுதினார்கள்.
மாணவ-மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் சிபிஎஸ்இ 10ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் சிபிஎஸ்இ இணையதளத்தில் இன்று வெளியிடப்பட்டது.
16 லட்சத்து 67 ஆயிரத்து 573 மாணவ மாணவிகள் 10ம் வகுப்பு தேர்வினை எழுதினார்கள். அதற்னான தேர்வு முடிவுகள் இன்று சிபிஎஸ்இ இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
சிபிஎஸ்இ 10ம் வகுப்பில் மாணவ மாணவிகள் 90.95% தேர்ச்சியினைப் பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டை விட 5.26% குறைவு ஆகும். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தேர்ச்சி வீதம் குறைந்துக் காணப்படுகிறது.
கடந்த வருடம் 96.21% தேர்ச்சி வீதம் இருந்தது. இந்த வருடம் 5.26% குறைந்துள்ளது. சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வு முடிவில் திருவனந்தபுரம் முதல் இடத்தையும், சென்னை மண்டலம் இரண்டாவது இடத்தையும் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்வு முடிவுகளை மாணவ மாணவிகள் கீழே உள்ள இணையதளங்களில் சென்று பார்த்து தெரிந்து கொள்ளலாம். தங்களது தேர்வு வரிசை எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.