வேலை! வேலை! வேலைவாய்ப்பு பற்றி கவலை அடைய வேண்டிய அவசிய மில்லை மாணவர்களே இனி வரும் காலத்தில் வேலை வாய்ப்பு தொழிற் பயிற்சி இல்லா நிலை அது குறித்து கவலை கொள்ள வேண்டிய அவசியமில்லை இதற்காக மத்திய அரசு புதிய திட்டங்களை வகுத்துள்ளது .

மத்திய அரசு அறிவித்துள்ள திட்டத்தின்படி இந்திய ஜப்பான் இடையே நடைபெறும் ஒப்பந்தம் மத்திய அரசின் திறன் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் இந்திய மாணவர்களை ஜப்பான் அனுப்பி தொழிற் பயிற்சி அளித்து வேலைவாய்ப்பு பெற வைக்க திட்டமிட்டுள்ளது இந்திய அரசு . இது குறித்து அறிவிக்கையில் இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஜப்பானிய முதலிடு அதிகரிக்க வாய்ப்புள்ளது .
அக்டோபர் 16க்கு பின் ஜப்பான் பயணத்தில் இதுகுறித்து ஆலோசணை ஓப்பந்தம் கையெழுத்தாகவுள்ளது என மத்திய அமைச்சரவைத் தகவல் அளித்துள்ளது . இதன் மூலம் மூன்று வருடம் ஜப்பானுக்கு சென்று தொழிற் பயிற்சி மேற்கொள்ள 50000 இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.
ஜப்பானுடன் கலாச்சார மற்றும் தொழில் உறவுகள் மேம்படும் அத்துடன் மாணவர்ளுக்கு தொழிற் பயிற்சியுடன் நல்ல வேலைவாய்ப்பு கிடைக்கும் .ஜப்பானின் முதலீடு அதிகரிக்கும் . இருநாடுகளுக்குடனான் இந்த பரஸ்பர ஒப்பந்தம் இந்திய இளைஞர்களுக்கு தொழிற் வளர்ச்சி அதிகரிக்கும். உள்நாட்டிலும் மாணவர்களின் தொழிற் பயிற்சி அவர்களை திறம்பட செயல்பட வைக்கும் . கல்வி தொழிற்குறித்த தொலைநோக்கு பார்வை அதிகரிக்கும் .
மாணவர்களுக்கு மூன்றாண்டுகள் தங்கியிருக்கும் அந்த வாய்ப்பு இந்தியாவின் தொழிற் வளர்ச்சி மற்றும் புதிய ஆக்கத்திற்கு நல்ல ஒரு ஆதாரமாக இருக்கும் . ஜப்பான போன்ற தேசத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் நன்றாக தங்களது திறன் புரிந்து கொள்ள உதவிகரமாக இருக்கும்.
மத்திய அரசின் மாணவ இளைஞர்கள் மேம்பாட்டுத்திட்டன் கீழ் இது இனிவரும் காலம் நடைமுறைப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது .மேலும் இந்திய மாணவர்களுக்கு ஜப்பான அரசு தொழிற் மேம்ப்பாட்டு பயிற்சி அளிக்க நிதிவசதியுடன் அளிப்பது மிகபெருமை வாய்ந்த ஒரு வாய்ப்பாகும். இதனை சிறந்த முறையில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பயன்படுத்த வேண்டும் .
சார்ந்த பதிவுகள்:


Click it and Unblock the Notifications












