அகிலஇந்திய போட்டி தேர்வுகளை அச்சமின்றி எதிர்கொள்ள தமிழகத்தின் மாணவர்களுக்கு சீடி வழங்கப்படும் என பள்ளி செங்கோட்டையன் தெரிவித்தார் .
தமிழக அரசின் அருங்காட்சியகங்கள் துறை மற்றும் தொல்லியல் துறை சார்பில் சென்னை வட்டாரத்தின் பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் தொடர்பான சொற்பொலிவுகள் சென்னை எழும்பூரில் உள்ள அருங்காட்சியக கலையரங்கில் நேற்று நடைபெற்றது .
பள்ளி கல்வித்துறை அமைச்சர் பண்டைய வரலாறு குறித்து பாடல்கள் வெளியிட்டுவிழாவில் பேசிய உயர்கல்வி அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் பேசினார் .
மதுரை அழகர்புரம் பண்டைகாலத்தில் துறைமுகமாக இருந்துள்ளது . அரியலூர் , பெரம்பளூர் பகுதிகளில் கிடைத்த தொல்லியல் தகவல்களை ஆராய்ந்து பார்க்கும் போது 2000 வருடங்களுக்கு முன் கடல்பகுதி இருந்தாக தெரியவருகின்றது .
மத்திய அரசு கொண்டுவரும் பொதுதேர்வு குறித்து மாணவர்கள் அச்சம் இன்னும் மூன்று மாதங்களில் தீர்க்கப்படும் என்றார் . மாணவர்களுக்கு நவீன தெளிவுடன் கூடிய படங்களை கொண்ட விளக்கங்கள் அடங்கிய 54000 கேள்விகளுடன் சீடிகள் உருவாக்கப்பட்டு வழங்கப்படும் என்றார்.
சீருடை வழங்களில் மாற்றம் கொண்டு வருவது குறித்து பரிசீலித்து வருகிறேம் . ஒன்று முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு ஒரே நிறத்தில் சீருடை மாற்றி 1 முதல் 5 வகுப்புகள் வரை ஒரு நிறத்திலும் 6 முதல் 10 வகுப்பு மாணவர்களுக்கு ஒரு நிறமும் 11, 12 வகுப்பு வரை என மூன்று நிறங்களில் சீருடை மாற்றம் கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளது . இதற்கு முன் மாணவர்களுக்கு 4 செட் சீருடைகள் வழங்கப்பட்டன இனிமேல் இரண்டு வழங்கப்படும் மற்ற இரண்டிற்க்கான சீருடை செட்டுகளுக்கான தொகை மாணவர்கள் கையில் கொடுக்கப்படும் மாணவர்கள் அவர்களுக்கு பிடித்த மாதிரி சீருடையை தைத்து போட்டுகொள்ளலாம் என்றார் .
கல்வித்துறையில் தன்னை விமர்சிப்பது குறித்து கவலயில்லை என்றும் இன்னும் கொஞ்ச நாட்களில் தமிழகம் நாட்டிற்கு முன்னுதரனமாக திகழும் என்றார் . வெளிப்படைத்தன்மையுடன் தான் நடந்துகொள்வதாக கூறினார் . பிளஸ் 1 மாணவர்களுக்கு தேர்வு குறித்து சிறப்பான பாடங்களும் தேர்வை எதிர்கொள்ளும் அளவிற்கு திறனுடன் பாடம் எடுக்க தரமான ஆசிரியர்கள் இருக்கிறார்கள் மற்றும் ஆசிரியர் இல்லாத பள்ளிகளில் பெற்றோர் ஆசிரியர்கள் கழகத்தின் மூலமாவது ஆசிரியர்களை நியமித்து பாடம் கற்றுத்தர பரிந்துறைக்கப்பட்டுள்ளது .
சார்ந்த பதிவுகள்:
புதுபொலிவுடன் தமிழக பள்ளிக்கல்வி இணையதளம் மாற்றம் பெற்றுள்ளது !!
தமிழக பள்ளிகளின் வளர்ச்சி மேம்பாட்டுக்கு உருதுணையாக இருந்த கல்வித்துறை செயலர் மாற்றமா
அடடே!!,, இமேஜ் மேங்கில் பாடங்களை கற்கபோகும் தமிழகப் பள்ளி மாணவர்கள் !!!