தனியார் பள்ளிகளுக்கு நிகராக, அரசுப்பள்ளிகளிலேயே எல்.கே.ஜி வகுப்புகள் துவங்கப்பட்டுள்ள நிலையில் இதற்கான சேர்க்கை வரும் ஜூன் 3ம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது.
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கில் தனியார் பள்ளிகளுக்கு இணையாக gல்வேறு திட்டங்கள் அரசுப் பள்ளிகளிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, முந்தைய காலகட்டத்தில் அரசுப் பள்ளிகளில் எல்.கே.ஜி வகுப்புகள் இல்லாத நிலை இருந்து வந்தது. இதனால், பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் எல்.கே.ஜி வகுப்புகளில் அதிக கட்டணம் செலுத்தி சேர்த்து வந்தனர்.
இந்த நிலையை மாற்றும் நோக்கில், தற்போது அரசுப்பள்ளிகளிலும் எல்.கே.ஜி வகுப்புகள் தொடங்க கடந்தாண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதனையடுத்து 2 லட்சத்து 381 பள்ளிகள், அங்கன்வாடிகள் தேர்வு செய்யப்பட்டது.
அதன்படி, நடப்பாண்டு முதல் எல்.கே.ஜி வகுப்புகள் துவங்கப்படுகிறது. இதற்கான சேர்க்கை வரும் ஜூன் 3ம் தேதி முதல் தொடங்கப்படுகிறது. குழந்தைகள் சேர்க்கையை தீவிரப்படுத்த தொடக்கக் கல்வி இயக்குநரகம், அனைத்து மாவட்டங்களில் உள்ள கல்வித்துறை அதிகாரிகளையும் வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.