சிறந்து விளையாட்டு வீரர்களை எம்எல்ஏக்கள் பரிந்துரை செய்தால் அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க அரசு தயாராக இருப்பத்தாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் சட்டபேரவையில் உறுதியளித்துள்ளார் .
விளையாட்டு வீரர்களை சட்டமன்றத்துறை அமைச்சர் பரிந்துரை செய்தால் அவ்விளையாட்டு வீரர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் அவர்கள் சிறந்து விளங்க தேவையான நடவடிக்கைகள் செய்து தரப்படுமென சட்டமன்றத்தில் கல்வியமைச்சர் தெரிவித்தார் . அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் இதனை ஏற்று ஒப்புதல் வழங்கினார்கள் .
இதுவரை தமிழக அரசு 1கோடியே 94 லட்சம் வரை விளையாட்டு வீரர்களின் மேம்பாட்டுக்கு அறிவித்து ஒதுக்கியது. 10 மண்டல அளவிலான போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன. 3240 விளையாட்டு வீரர்கள் விளையாடில் பங்கு கொண்டுள்ளனர். மேலும் ஒவ்வொரு வீரர்க்கும் ரூபாய் 6000 தொகை உதவிப்பணமாக அளிக்கப்பட்டு வருகின்றது . விளையாட்டுகள் பள்ளியளவில் நடத்தப்பட்டு மண்டல அளவில் மாணவர்கள் கொண்டுவரப்பட்டு அவர்களின் திறமைக்கு அரசு தனித்துவமாக அளவிட்டு வீரர்கள்வளர தனது பெரும்பங்காற்றி வருகிறது தமிழக அரசு .
விளையாட்டு விடுதிகளில் 7, 8, 9 ,11 ஆகிய வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு தங்க அனுமதியுடன் நல்ல தரமான பயிற்சி வழங்கி வருகிறது அரசு . இதுவரை 29 விளையாட்டு விடுதிகளில் 2060 விளையாட்டு மாணவர்கள் தங்கி பயிற்சி பெற்று வருகின்றனர். மாணவர்களுக்கு ஆரோக்கிய உணவு மற்றும் அவர்களுக்கு தேவையான பயிற்சிகள் அனைத்தும் முறைப்படி வழங்கிவருகிறது .
திறமையான விளையாட்டு வீரர்களை அடையாளம் காண பல்வேறு போட்டிகள் பள்ளி அளவில் நடத்தப்பட்டு 10வயது முதல்14 வயது வரை திறன் தேடுதல் வேட்டை தமிழக அரசு நடத்தி மாணவர்களுக்கு உற்சாகமளித்து அவர்களை வளப்படுத்துகிறது தமிழகஅரசு. மேலும் உலக அளவில் அவர்களின் பங்களிப்பை உறுதி செய்கின்றது மாநில அரசு இது மாணவர்களின் எதிர்காலத்திற்கும் தேச பெருமைக்கும் வளம் சேர்க்கும் .