சென்னை: அண்ணா பல்கலைக் கழக இணையதளத்தில் பொறியியல் படிப்பிற்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தரவரிசைப் பட்டியலை உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் வெளியிட்டார்.
200க்கு 200 கட் ஆப் மதிப்பெண்ணை 59 பேர் எடுத்துள்ளனர். சிலர் மருத்துவப் படிப்பில் சேர வாய்ப்பு உள்ளதால் நீட் முடிவுக்கு ஏற்ப கலந்தாய்வு நடத்தப்படும். நீட் தேர்வு முடிவுகள் வெளியான பின்பு பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு தொடங்கும் என உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்துள்ளார்.
பி.இ. மற்றும் பி.டெக் படிப்புகளில் மாணவர் சேர்க்கை ஒற்றை சாளர கலந்தாய்வு முறையில் நடத்தப்பட்டு வருகிறது. அண்ணா பல்கலைக் கழகத்தில் 1,40,077 பேர் கலந்தாய்வில் பங்கேற்க விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான ரேண்டம் எண் ஜூன் 20ல் வெளியிடப்பட்டது.
பி.இ. மற்றும் பி.டெக் மாணவர் சேர்க்கை கலந்தாய்விற்கு விண்ணப்பித்தவர்களுக்கு தரவரிசை பட்டியல் இன்று ஜூன் 22ந் தேதி அண்ணா பல்கலைக் கழகத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் அண்ணா பல்கலை இணையதளத்தில் பொறியில் படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியலை இன்று வெளியிட்டார். www.annauniv.edu, www.tnea.ac.in என்ற இணையதள முகவரிக்குச் சென்று தரவரிசை பட்டியலை தெரிந்து கொள்ளலாம்.
தமிழகத்தில் பொறியியல் படிப்பிற்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. மேலும் ஜூன் 27ம் தேதி கலந்தாய்வு தொடங்கப்படும் எனவும் அண்ணா பல்கலை தெரிவித்துள்ளது.
கலந்தாய்விற்கு விண்ணப்பித்தவர்கள் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகம். ஆனால் கலந்தாய்வில் கலந்து கொள்ளுபவர்களின் அடிப்படையில்தான் பொறியியல் இடங்கள் நிரப்பப்படும்.