கடந்த மார்ச் மாதம் 16 ஆம் தேதி முதல் ஏப்ரல் 20 ஆம் தேதி வரை நடைபெற்ற எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 12 ஆயிரத்து 337 பள்ளிகளில் இருந்து 10 லட்சத்து 1,140 மாணவ, மாணவிகள் எழுதியுள்ளனர்.
இத்தேர்வை தனித் தேர்வர்களாக 5 திருநங்கைகளோடு, 186 சிறை கைதிகளும் எழுதியுள்ளனர். இந்நிலையில், 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் 23-ஆம் தேதி இன்று காலை 9.30 மணிக்கு திட்டமிட்டபடி வெளியாகி உள்ளது.

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவுகளை www.dge.tn.nic.in மற்றும் www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்களில் பார்த்து தெரிந்துக்கொள்ளலாம் .
மேலும் ஊடகவியலாளர்கள் மேற்கண்ட இணையதள முகவரிகளில் 23-ஆம் தேதி காலை 9.30 மணி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் 98.5% தேர்ச்சியுடன் 10 ஆம் வகுப்புத் தேர்வில் முதலிடத்தையும்,ஈரோடு மாவட்டம் 98.38% தேர்ச்சியுடன் இரண்டாவது இடத்தையும், விருதுநகர் மாவட்டம் 98.26% தேர்ச்சியுடன் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது.


Click it and Unblock the Notifications












