12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில் கோவை மாவட்டத்திலிருந்து பங்கேற்ற கண்பார்வையற்ற அனைத்து மாணவர்களுமே 100 சதவிகிதம் தேர்ச்சியடைந்துள்ளனர்.

தமிழக அரசு பாடத்திட்டத்திற்கு உட்பட்ட 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று (ஜூலை 16) காலை வெளியிடப்பட்டது. இதில், மாநில அளவில் கோவை மாவட்டம் 96.39 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.
இதனிடையே, கோவை மாவட்டத்திலிருந்து கண்பார்வையற்ற நிலையில் 12ம் வகுப்பு தேர்வில் பங்கேற்ற 23 தேர்வர்களும் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
கோவை மாவட்டத்தில் கண் பார்வையற்ற 23 பேர் 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்ற நிலையில், காது கேளாதோர் மற்றும் வாய் பேச முடியாதோர் என 35 பேரும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் பங்கேற்றனர். அவர்களில் 29 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாற்றுத்திறனாளிகள் 36 பேர் தேர்வு எழுதிய நிலையில் அதில் 32 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.


Click it and Unblock the Notifications












