சென்னை: ஸ்வீடனிலுள்ள உயர்கல்வி நிறுவனத்தில் கல்வி உதவித்தொகையுடன் படிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.
ஸ்வீடனிலுள்ள ஸ்வீடிஷ் இன்ஸ்டிடியூட், மிகவும் பிரபலமான கல்வி நிறுவனங்களில் ஒன்றாகும். இந்த நிறுவனத்தில் பயில்வதற்கு வாய்ப்புக் கிடைத்துள்ளது. இந்தப் படிப்புகளைப் பயில உதவித்தொகை வழங்கப்படுகிறது என்பதுதான் இதிலுள்ள சிறப்பம்சமாகும்.
2016-ம் கல்வியாண்டில் இந்தப் படிப்புகள் தொடங்கும். இந்த உதவித்தொகையானது பயிற்றுக் கட்டணம், அங்கு தங்கி படிப்பதற்கான செலவுகள் அடங்கியது ஆகும். 300 பேருக்கு இந்த உதவித்தொகைக் கிடைக்கும். ஸ்வீடன் கரன்சியான ஸ்வீடிஷ் குரோனாவில் மாதம் 9 ஆயிரம் கிடைக்கும்.
மேலும் போக்குவரத்து மானியமாக 15 ஆயிரம் ஸ்வீடிஷ் குரோனா கிடைக்கும். இங்கு மாஸ்டர் டிகிரி சேர்பவர்களுக்கு மட்டுமே இந்த ஸ்காலர்ஷிப் கிடைக்கும். மேலும் இந்த படிப்பில் சேர்பவர்கள் 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றவர்களாக இருக்கவேண்டும். அவர்கள் மாஸ்டர் டிகிரி படிப்புக்கு விண்ணப்பித்தவராக இருக்கவேண்டும்.
இந்த உதவித்தொகையைப் பெற டிசம்பர் 1-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு https://eng.si.se/areas-of-operation/scholarships-and-grants/the-swedish-institute-study-scholarships/siss-eligibility-criteria என்ற லிங்க்கைத் தொடர்புகொள்ளலாம்.