சென்னை: சர்தார் வல்லபபாய் படேல் நேஷனல் போலீஸ் அகாடமியில்(எஸ்விபிஎன்பிஏ) விளையாட்டுப் பயிற்சியாளர்களுக்கு வேலை காத்திருக்கிறது.
தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் இந்தப் பணியிடங்களுக்கு ஜனவரி 20-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பவேண்டும்.
மொத்தம் 2 பணியிடங்கள் காலியாகவுள்ளன. இந்த வேலையில் சேர விரும்புபவர்கள் இந்திய விளையாட்டு ஆணையம் நடத்தும் அகாடமியில் டிப்ளமோ படிப்பு முடித்திருக்கவேண்டும் அல்லது அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்திலிருந்து டிப்ளமோ படிப்பை முடித்திருக்கவேண்டும்.
வயது 50-க்கு மிகாமல் இருக்கவேண்டும்.
தகுதியுள்ள நபர்கள் விண்ணப்பங்களை தேவையான ஆவணங்களுடன் the Deputy Director (Estt.), S.V.P. National Police Academy, Hyderabad -500052 என்ற முகவரிக்கு ஜனவரி 20-ம் தேதிக்குள் அனுப்பவேண்டும்.
ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பயிற்சிஅளிக்க உதவும் இந்திய தேசிய இன்ஸ்டிடியூட்டாகும் சர்தார் வல்லபபா் படேல் நேஷனல் போலீஸ் அகாடமியாகும். இங்கு பயிற்சி பெற்ற பின்னரே ஐபிஎஸ் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பணிகளுக்கு அனுப்பி வைக்கப்படுவர். கூடுதல் விவரங்களுக்கு http://www.svpnpa.gov.in என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.