சென்னை : சுப்ரீம் கோர்ட்டில் இளநிலை உதவியாளர் பணிக்கு 57 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்ட்டுள்ளது. குரூப்-பி தரத்திலான இந்தப் பணிக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் காலி இடங்கள் நிரப்பப்படுகின்றன. இதற்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 10.03.2017ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
வயது வரம்பு -
1.12.2016ம் தேதிக்குள் 27 வயது பூர்த்தியானவர்களாக இருக்க வேண்டும்.
எஸ்சி , எஸ்டி, ஓபிசி, பிரிவினர், மாற்றுத் திறனாளிகள் முன்னாள் படைவீரர்கள், சுதத்திர போராட்ட வீரர்கள் ஆகியோர்களுக்கு வயது வரம்வு தளர்வு அனுமதிக்கப்படும்.
கல்வித் தகுதி -
அங்கீகாரம் பெற்ற பல்கலைக் கழகங்களில் ஏதேனும் ஒரு பிரிவில் இளங்கலை பட்டப்படிப்பு முடித்தவர்கள், தட்டச்சு மற்றும் கணிணி இயக்கும் திறன் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம் -
பொதுப் பிரிவினர் rs. 300/- விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும்.
எஸ்சி , எஸ்டி பிரிவினர், மாற்றுத் திறனாளிகள் மற்றும் முன்னாள் படைவீரர்கள் rs. 150/- விண்ணப்பக் கட்டணம் செலுத்தினால் போதும்.
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலம். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 10.03.2017.
மேலும் தகவல்களுக்கு www.sci.nic.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.