நீட் மற்றும் ஜெஇஇ நுழைவுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்படாது என்றும், தேர்வு நடத்தும் விதிமுறைகளில் தலையிடுவது மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கும் என்றும் உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
கொரோனா நோய்த் தொற்றினைக் கட்டுப்படுத்தும் விதமாக தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், நீட் மற்றும் ஜெஇஇ நுழைவுத் தேர்வுகளையும் ஒத்தி வைக்க வேண்டும் என 11 மாநிலங்களிலிருந்து 11 மாணவர்கள் சார்பில் வழக்கறிஞர் அலக் அலோக் ஸ்ரீவஸ்தா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, 'கொரோனா நோய்த் தொற்று பரவல் காரணமாக வாழ்க்கையை நிறுத்தி வைக்க முடியாது என்றும், கல்விக் கொள்கையில் தலையிடுவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை என்றும் கூறியுள்ளது.
மேலும், நீட் மற்றும் ஜெஇஇ தேர்வுகளை ஒத்தி வைத்தால் மாணவர்களின் எதிர்காலம் ஆபத்தில் முடியும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இதனிடையே, மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு செப்டம்பர் 13ம் தேதி நடைபெறும். ஜெஇஇ முதன்மைத் தேர்வுகள் செப்டம்பர் 1 முதல் செப்டம்பர் 6 ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.