கற்றது கையளவு கல்லாதது உலகளவு ... நீங்கள் போட்டு வைத்த வாழ்க்கை திட்டம் என்றும் சிறந்திருக்க உங்கள் வாழ்க்கை கல்வி கலைக்கட்ட வாழ்த்துக்கள்
இன்று நம்வாழ்வின் தொடக்க நாள் போன்று ஒவ்வொரு செயலையும் நாம் கற்றுகொள்ள வேண்டும் .
வாழ்நாளில் ஒவ்வொரு முறையும் நீங்கள் கீழே விழும்பொழுதுதான் எழ முடியும் .
விழும்போதெல்லாம் எல்லாம் எழவேண்டும் என்ற துடிப்பு இருக்க வேண்டும் .
நம்மிடம் இருக்கும் திறன் அறிந்து செயல்பட வேண்டும் . தினமும் கற்றுக்கொள்ள வேண்டும் என்ன என்ற எண்ணம் வேண்டும். வாழ்வனைத்திலும் மாணவனாக இருப்பவரே வாழ்வை வெல்லும் தகுதிப் படைத்தவராக இருப்பார்கள் .
விஜயதசமிதனில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு கல்வி வளர்ச்சிக்காக பிரார்த்தனையில் ஈடுபடுவது வழக்கமாகும். வீடு மற்றும் தொழில், அலுவலகங்கள் அனைத்திலும் பூஜை செய்யப்படுகிறது, மேலும் பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்காக பெற்றோர்கள் புதிதாக மாணவர்களை பள்ளியில் சேர்ப்பது வழக்கமாகும் . புதிய தொடக்கமாக இந்நாளில் தொடங்குவார்கள் நாவராத்தி நாளின் சிறப்பு வாயந்த நாளாகும்.
ஆயுத பூஜையில் எதிர்மறை எண்ணங்களை விடுத்து , விஜயதசமியில் மாணவராய் வாழ்வோம் வாழ்கையின் இலக்கை நோக்கி ஒடுவோம் தர்மத்தை கற்றுகொள்வோம் அதர்மத்தை கல்வத்தனத்தால் வெல்வோம் .
மாணவர்களுக்கு இன்றும் நாளையும் கொண்டாட்டமாக இருக்கும் காரணம் மாணவர்கள் தங்களது புத்தகங்களை அனைத்துக்கும் அழங்காரம் செய்து, தங்கள் கல்விக்கு இறைத்துணை வேண்டி பூஜையில் பங்கேற்பார்கள். நாட்டில் உள்ள மாணவர்கள் இறைதனை நோக்கும் நவராத்திரி நாட்கள் இன்றும் நாளையும் இந்த இனிய நாளில் அனைவருக்கும் இறையருள் கிடைத்து அனைவரது வேண்டுதலும் நிறைவேற கேரியர் இந்தியா இனிதே வாழ்த்துகிறது , இந்நாள் போல் எந்நாழும் சிறக்க வாழ்த்துக்கள் .
சார்ந்த பதிவுகள்: