குறைந்து வரும் கால்நடை மருத்துவப் படிப்பு மோகம்: இந்த ஆண்டில் 16,715 பேர் மட்டுமே விண்ணப்பம்!

சென்னை: கால்நடை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்காக நேற்று மாலை 5 மணி வரை 16 ஆயிரத்து 715 பேர் பூர்த்தி செய்த விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ளனர். இதன்மூலம் கால்நடை மருத்துவம் பயில மாணவர்களிடையே ஆர்வம் குறைந்திருப்பதாகத் தெரியவந்துள்ளது.

கடந்த ஆண்டில் கால்நடை மருத்துவம் பயில மாணவர்கள் அதிக அளவில் விண்ணப்பித்திருந்தனர். கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் இந்த எண்ணிக்கை குறைவாக இருப்பதாக காலநடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழதெரிவித்துள்ளது.

குறைந்து வரும் கால்நடை மருத்துவப் படிப்பு மோகம்: இந்த ஆண்டில் 16,715 பேர் மட்டுமே விண்ணப்பம்!

தமிழகத்தில் கால்நடை மருத்துவப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது.

கடந்த 2014-15 கல்வியாண்டில் பி.வி.எஸ்.சி., பி.டெக். உணவு தொழில்நுட்பம், பி.டெக். கோழியின உற்பத்தித் தொழில்நுட்பம் ஆகிய மூன்று படிப்புகளுக்கும் சேர்த்து மொத்தம் 18,698 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில் 2015-16 கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பை மே மாதம் பல்கலைக்கழகம் வெளியிட்டது. கலந்தாய்வுக்கான விண்ணப்ப பதிவிறக்கம் மே 17-ஆம் தேதி தொடங்கியது. இதுவரை 16,715 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். இந்த முறை, விண்ணப்ப விநியோகம் முழுவதும் இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்யும் முறையை பல்கலைக்கழகம் முதன் முறையாக அறிமுகம் செய்தது. இதனால், நேரடி விண்ணப்ப விநியோகம் நிறுத்தப்பட்டது.

பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்க ஜூன் 10 கடைசி தேதியாகும்.. அதன்படி, நேற்று மாலை வரை மொத்தம் 16 ஆயிரத்து 715 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இதுகுறித்து தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக துணைவேந்தர் திலகர் கூறியதாவது:

தபால் மூலம் சிலர் விண்ணப்பங்களை அனுப்பியுள்ளனர். அந்த விண்ணப்பங்களும் வந்து சேர்ந்தால் விண்ணப்பித்தோர் எண்ணிக்கை மேலும் சற்று அதிகரிக்கும். ஆனாலும் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது விண்ணப்பித்தோரின் எண்ணிக்கை குறைவுதான் என்றார் அவர்.

மாணவர்களிடையே கால்நடை அறிவியல் படிப்புக்கான மோகம் குறைந்து வருகிறது. பெரும்பாலான மாணவ, மாணவிகள் எம்.பி.பி.எஸ்.. பி.டி.எஸ். படிப்பதையே விரும்புகின்றனர். அங்கு இடம் கிடைக்காவிட்டாலும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் பணம் கொடுத்தாவது சேர்ந்து விடுகின்றனர். எதுவுமே கிடைக்கத நிலையில்தான் கால்நடை அறிவியல் படிப்புக்கு வருகின்றனர். முன்பு இந்த படிப்புகளுக்கும் அதிக அளவில் கிராக்கி இருந்தது. ஆனால் அது இது வெகுவாகக் குறைந்துவிட்டது என்கிறார் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக மூத்த அதிகாரி ஒருவர்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Students showing less interest in joining veterinary science courses in Tamil Nadu.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X