சென்னை: வீணாகும் காகிதத்திலிருந்து கலைப்பொருட்களை உருவாக்கி வியக்க வைக்கின்றனர் அரசு பள்ளி மாணவர்கள்.
கர்நாடகா
கர்நாடக மாநிலம் பெங்களூரு நகரிலுள்ள கிடதகோனேனஹள்ளி அரசு உயர் தொடக்கப் பள்ளி மாணவர்கள் இந்த கலைப்பொருட்களை உருவாக்கி வியக்க வைக்கின்றனர்.
கலைப்பொருட்கள்
இந்தக் கலைப்பொருட்களை விற்பனை செய்வதன் மூலம் அதில் கிடைக்கும் தொகையைக் கொண்டு அரசு பள்ளிக்கு விளையாட்டுக் கருவிகள், தோட்டக் கலை கருவிகளை வாங்கியுள்ளனர்.
கேஐஐடி
கலிங்கா இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்டஸ்டிரியல் அண்ட் டெக்னாலஜி (கேஐஐடி) நிறுவனர் டாக்டர் அச்சுதா சமந்தா, அண்மையில் ஆர்ட் ஆஃப் கிவிங் என்ற அமைப்பைத் தொடங்கினார்.
ஆர்ட் ஆஃப் கிவிங்
இந்த அமைப்பு மூலம் பல்வேறு பயிற்சிகள் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
காகிதங்கள்
வீணாகும் காகிதப் பொருட்கள், பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளிட்டவற்றிலிருந்து கலைப்பொருட்களை உருவாக்கும் பயிற்சியையும் அவர்கள் கற்றுக்கொடுத்துள்ளனர்.
மாணவர்கள்
இதைத் தொடர்ந்து கிடதகோனேனஹள்ளி அரசுப் பள்ளி மாணவர்கள் காகிதப் பொருட்களிலிருந்து கலைப்பொருட்களை உருவாக்கி காட்டினர்.
பள்ளிக்குக் கருவிகள்
இந்தப் பொருட்களை விற்பனை செய்ததன் மூலம் பள்ளிக்குத் தேவையான விளையாட்டு உபகரணங்கள், தோட்டக்கலை கருவிகளையும் வாங்கிக் கொடுத்துள்ளனர்.
பரிசுப் பொருட்கள்
கலைப்பொருட்கள், பொம்மைகள், பறவைக் கூடுகள், கிண்ணங்கள், பரிசுப் பொருட்கள், புகைப்பட பிரேம்களை உருவாக்கியுள்ளனர்.
நம்பிக்கை
இதுகுறித்து 6-ம் வகுப்பு மாணவி எஸ். மது கூறியதாவது: இந்தக் கலையைக் கற்றுக்கொண்டதன் மூலம் எங்களுக்கு நம்பிக்கை கிடைத்துள்ளது. இதை அனைவருக்கும் கற்றுக்கொடுப்போம் என்றார்.
பெருமை
பள்ளி தலைமை ஆசிரியர் சி. வசந்தகுமாரி கூறியதாவது: எங்கள் மாணவர்களை நினைக்கும்போது எங்களுக்கு பெருமையாக இருக்கிறது. அனைத்து மாணவர்களுக்கும் இந்தக் கலையைக் கற்றுத் தருகிறோம். இதைப் போலவே அவர்களுக்கு விளையாட்டு, தோட்டக் கலையைக் கற்றுத் தருகிறோம் என்றார் அவர்.