சென்னை: பிளஸ்டூ தமிழ் முதல் தாள் எளிதாக இருந்ததாக மாணவ, மாணவியர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் இன்று பிளஸ்டூ தேர்வுகள் தொடங்கின. மொழி பாடங்களுக்கான முதல் தாள் தேர்வு இன்று நடைபெற்றது. தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாளம் உட்பட 10 மொழிகளில் இன்று முதல் தாள் தேர்வு நடைபெற்றது.
மாணவ மாணவியர்கள் தமிழ் முதல் தாள் தேர்வு மிகவும் எளிதாக இருந்தது என தெரிவித்துள்ளனர். நேரமும் போதிய அளவிற்கு கொடுக்கப்பட்டு இருந்தது. முதல் தேர்வு என்பதால் சிறிய பயம் தொடக்கத்தில் இருந்தது. ஆனால் தமிழ் முதல் தாள் மிகவும் எளிதாக இருந்ததால் மீதமுள்ள தேர்வுகளும் இது போல எளிதாக இருக்கம் என நம்பிக்கையோடு இருக்கிறோம் எனக் கூறியுள்ளனர்.
For Daily Alerts
English summary
Students have expressed their happiness over the Tamil first paper in +2 exam today and said that the paper was easy.
Story first published: Thursday, March 2, 2017, 14:58 [IST]