இன்ஜினியரிங் கவுன்சிலை தடைவிதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு கொடுக்கப்பட்டுள்ளது . திருநெல்வேலியில் உள்ள அண்ணா பல்கலைகழக சுயநிதி பொறியியல் கல்லுரிகளின் சங்கத்தலைவர் முகமது ஜலீல் தாக்கல் செய்தார் மனு.
2007 முதல் 2016 வரை காலியாக லட்சக்கணக்கான இடங்கள் காலியாக இருப்பதாகவும் அதனால் பல கல்லுரிகள் மூடும் நிலைக்கு வந்திருப்பதாகவும் கூறி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு .
கவுன்சிலிங்கின் போது நிரப்படாத இடங்களை கடைசி நேரத்தில் திருப்பியளிப்பதால் கடைசி நேரத்தில் தனியார் கல்லுரிகளில் அவ்விடங்களை நிரப்ப முடியவில்லை. இதனால் கல்லுரிகள் பல மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன . இந்தாண்டு மட்டும் 22 கல்லுரிகள் மூடப்பட்டுள்ளன . மேலும் இது கவுன்சிலிங் பின்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது இது மேலும் கல்லுரி மூடல் எண்ணிக்கையை அதிகரிக்கும் ஆதலால் கவுன்சிலிங்கில் அரசு மற்றும் சுயநிதி கல்லுரிகளின் இடமளிப்பு விகிதம் மாற்றும்படி அரசுக்கு மனு அளிக்கப்பட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் இது குறித்து வழக்கு தொடுக்கப்படு 27 ஆம் தேதி தொடங்கும் கவுன்சிலிங் நிறுத்த கோரி வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது .
ஆனால் இதுவரை நீட் தேர்வு முடிவில் இருந்த சிக்கல்கள் கலையவே நாட்கள் பிடித்ததால் மாணவர்களும் பெற்றோரும் மிகுந்த மனஉலைச்சலுக்கு ஆளானார்கள் . நீட் தேர்வு முடிவு இறுதியாக ஜூன் 26ல் வெளியிடப்படும் என அறிவித்த பிறகு இந்த வழக்கானது தொடுக்கப்பட்டுள்ளது . இனியும் பொறியியல் சிக்கல்கள் அதிகரித்தால் அது இன்னும் மாணவர்கள் கல்வியை பாதிக்கும் இதற்கு ஒரு நல்ல தீர்வு எட்ட வேண்டும் .
சார்ந்த தகவலகள் :
இன்ஜினியரிங் கல்வி கட்டணம் உயரும் வாய்ப்புள்ளது .கல்லுரிகளின் தரவரிசை விரைவில் வெளியிடப்படும்