சென்னை: மாணவர்கள், தொழிலாளர்களுக்கான விசா கட்டணத்தை பிரிட்டன் அரசு கடுமையாக உயர்த்தியுள்ளது. இதனால் பிரிட்டன் சென்று படிக்கும் ஆசையிலுள்ள மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மார்ச் 18 முதல் இந்த கட்டண உயர்வுக்கு அமலுக்கு வருவதாக பிரிட்டன் அரசு அறிவித்துளளது. தொழிலாளர்கள், மாணவர்களுக்கான விசா கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன.

பிரிட்டனுக்கு சென்று வரும் இந்தியர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் தொழிலாளர்கள், மாணவர்களுக்கான கட்டணத்தை 25 சதவீதம் உயர்த்தியுளளது பிரிட்டன் அரசு. இதனால் மாணவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த ஜனவரி மாதமே இந்த கட்டண உயர்வு அமலுக்கு வருவதாக இருந்தது. ஆனால் 2 சதவீதம் மட்டுமே உயர்த்தப்படுவதாக இருந்தது. ஆனால் 25 சதவீதம் உயர்த்தியுள்ளதால் மாணவர்களும், தொழிலாளர்களும் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஏராளமான தொழிலாளர்கள் லண்டனுக்கு பணி நிமித்தம் சென்று வருகின்றனர். இந்தக் கட்டண உயர்வு தொழிலாளர்களை வெகுவாகப் பாதிக்கும் என்று இந்திய வெளியுறவுத் துறை அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications












