சென்னை: பத்தாம் வகுப்பு பொதுத்த் தேர்வுக்கான நுழைவுச் சீட்டுகள் இன்று பள்ளிக் கல்வித்துறை இணையதளத்தில், பள்ளிகள் வாரியாக வெளியிடப்பட்டுள்ளன. ஒவ்வொரு பள்ளியும் அதனை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வானது வருகின்ற 19 ஆம் தேதியன்று துவங்கவுள்ளது. முன்பெல்லாம் பொதுதேர்வென்றாலே புகைப்படம் ஒட்டி, கையெழுத்தெல்லாம் போட்டு ஹால் டிக்கெட் வழங்கப்பட்டு வந்தது.
ஆனால், இப்போதோ எல்லாமே கணினி மயமானதால் அது அப்படியே மாறி தரவிறக்கம் செய்தால் போதும் என்ற நிலை வந்துவிட்டது.
மாணவர்கள் குறித்த விவரங்கள் ஒரு டேட்டா பேஸில் மொத்தமாக சேகரிக்கப்பட்டு அவர்களுடைய புகைப்படமும் இணைக்கப்பட்டு பள்ளிக் கல்வித்துறை இணையதளம் மூலமாக வெளியிடப்பட்டுள்ளது.
அந்த ஹால் டிக்கெட்டுகளைப் பதிவிறக்கம் செய்ய ஒவ்வொரு பள்ளிக்கும் தனி பெயரும், ரகசிய எண்ணும் கொடுக்கப்பட்டிருக்கின்றது. அதன்மூலமாக ஒவ்வொரு மாணவருக்கும் நுழைவுச்சீட்டினை தரவிறக்கம் செய்து அளிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
இணையதள முகவரி: http://www.tndge.in/