ஆசிரியர்கள் வல்லமை தாராயோ என வந்து நிற்கும் மாணவர்களின் ஆற்றல் ஆசிரியர்கள் தான் நீங்கள் தேர்ந்தெடுக்கும் துறை எதுவானாலும் அதனை நோக்கி உங்களை செலுத்தும் மிகப்பெரிய ஆயுதம் ஆசிரியர்கள் ஆவார்கள் அதனை நாம் அறிய வேண்டும் .

நாடாளும் அரசானாகும் திறன் படைத்த சந்திரகுப்தரின் பெருமைக்கு காரணம் சாணக்கியரின் கையில் இருந்தது .
"நீ எதுவாக நினைக்கிறாயோ அதுவாகவே ஆகின்றாய்" என்றாரே நாட்டின் எழுச்சியை தூண்டிய துறவி விவேகமாக செயல்பட பணித்தாரே சுவாமி விவேகானந்தர் அவரை உருவாக்கிய பெருமை இராமகிருஷ்ண பரஹம்சர் ஆவார்.
நாட்டின் மிகபெரிய ஆக்கமும் தேசத்தின் கற்றல் திறனும் திறம்பட இருக்க வேண்டும் எனில் ஆசிரியர் உடன் இருக்க வேண்டும் . கிரிகெட்டின் கடவுள் என்று வர்ணிக்கப்படுகின்ற சச்சின் டெண்டுல்கரை உருவாக்கிய பெருமை இராம்காந்த் அச்ரேகர் என்னும் ஆசிரியர் ஆவார் .
சிற்பியின் உளி ஆசிரியர்
சுதந்திரம் கொடுக்கப்படுவது அல்ல எடுக்கப்படுவது
களிமணை கலையாக்கும் ஆசிரியர்
கிரிகெட்டின் கடவுளுக்கும் கடும் பயிற்சி கொடுத்து உருவாக்கியவர் ஆசிரியர்
ஆசிரியர் எனும் தந்தை சொல்மிக்க மந்திரமில்லை
தந்தையென்ற ஒரு ஒளியை பெற்றதால் இந்தியாவின் இரு மெடல்களை பெரும் மாணவர்கள்
ஆதி முதல் அந்தம் வரை ஆசிரியர்
பயணங்களின் தொடக்கமும் முடிவும் ஆசிரியர்களின் துணையுடன் நடைபெறும்
குக்கிராமத்தில் பழமைவாதிகளின் மத்தியில் தேசத்திற்கு தன் மகள்கள் இருவரையும் ஆசிரியராக இருந்து மல்யுத்தம் கற்றுகொடுத்து அனுப்பி நாட்டை பெருமை படுத்திய பெருமை ஆசிரியரை சேரும் . உலகினை ஒருவன் ஆட்டி படைக்க வேண்டுமென்ற ஒரு உத்வேகம் பெருகிறான் என்றால் அவன் அதற்கான பாடத்தையும் ஆசிரியரிமிருந்துதான பெற வேண்டும் .
இந்திய விடுதலைபோராட்டத்தில் முக்கிய பங்காற்றிய சுபாஷ் சந்திர போஸ்க்கு ஆசானாக இருந்து வழிக்காட்டியது தேசபந்து சித்தரஞ்சன் தாஸ் ஆவார், இவ்வாறு பெருமைகளை நமக்களித்த ஆசிரியர்களை என்றும் பெருமை படுத்துவோம் போற்றுவோம் .
சார்ந்த பதிவுகள்:


Click it and Unblock the Notifications












