சென்னை: மத்திய அரசு நடத்தும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் எம்.பி.க்களுக்கான ஒதுக்கீடு தற்போது 10-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்பு இந்த எண்ணிக்கை 6-ஆக இருந்தது.
நாட்டிலுள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மாணவர்களைச் சேர்க்க எம்.பி. ஒருவர் 6 பேருக்கு சிபாரிசு செய்யலாம் என்ற நடைமுறை இருந்தது. இதைத் தற்போது 10 பேருக்கு சிபாரிசு செய்யலாம் என மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. கேந்திரிய வித்யாலயா பள்ளியின் 103-வது கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரியவந்துள்ளது.
இந்த நடைமுறை 2016-17-ம் கல்வியாண்டில் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் ஒரு கல்வியாண்டில் எம்.பி. ஒருவர் 10 பேருக்கு சிபாரிசுகளை அளிக்க முடியும். அவரது தொகுதியைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு மட்டுமே இந்த சிபாரிசை அவர் அளிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல ராஜ்யசபா எம்.பி.க்களும், நியமன ராஜ்யசபா எம்.பி.க்களும் 10 பேருக்கு இந்தப் பரிந்துரையை வழங்கலாம்.
ஆனால் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு சிபாரிசுக் கடிதங்களை எம்.பி.க்கள் வழங்க இயலாது.