சென்னை: தென் கிழக்கு ரயில்வேயில் சட்ட உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஏப்ரல் 1-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பவேண்டும்.
மொத்தம் 10 பணியிடங்கள் காலியாகவுள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு எல்.எல்.பி. படிப்பை அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்திலிருந்து பெற்றிருக்கவேண்டும்.
நேர்முகத் தேர்வு, எழுத்துத் தேர்வு மூலம் ஆட்கள் இந்தப் பணியிடங்களுக்குத் தேர்வு செய்யப்படுவர்.
விருப்பமுள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பங்களை அனுப்பவேண்டும்.கூடுதல் விவரங்களுக்கு தென் கிழக்கு ரயில்வே இணையதளத்தைத் தொடர்புகொள்ளலாம்.
கல்வித் தகுதி, வயதுச் சலுகை, சம்பளம் போன்ற விவரங்களுக்கு http://www.ser.indianrailways.gov.in/ என்ற இணையதளத்தில் காணலாம்.
For Quick Alerts
For Daily Alerts
English summary
Applications have been invited by South Eastern Railway for 10 Ch. Law Assistant Posts. Interested candidates can apply to the post through the prescribed format along with the required documents on or before 1st April 2016.