'நீட்' தேர்வில் தோல்வி அடையும் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
இந்த நிலையில், மாணவர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் விதமாக, தமிழ்நாட்டின் தஞ்சாவூர், வேலூர், கோயம்புத்தூரில் 60 வயது முதியவர்கள் தேர்வு எழுதியுள்ளனர்.
தமிழகம் உள்பட நாடு முழுவதும் நேற்று நீட் தேர்வு நடந்தது. மாணவ, மாணவிகள் தேர்வில் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
நீட் தேர்வு கண்டு பயம், தேர்வில் தோல்வி அடைந்தால் தற்கொலை செய்ய வேண்டாம் என, விழிப்புணர்வு மற்றும் தன்னம்பிக்கை ஊட்டும் விதமாக, கோயம்புத்தூர் மாவட்டம், விளாங்குறிச்சி சாலை விநாயகபுரத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் பிரின்ஸ் மாணிக்கம்,70, திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அரசு ஊழியர் ராமமூர்த்தி, 68, மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி ராஜ்யக்கொடி,55 உள்ளிட்டோர், நேற்று நடந்த நீட் தேர்வில் பங்கேற்றனர்.
தேர்வெழுதிய முதியவர்கள், தேர்வில் அடையும் தோல்வியால், மாணவ, மாணவிகள் தற்கொலை செய்து கொள்ளாமல், தன்னம்பிக்கையுடன் தேர்வை, தொடர்ந்து எழுதி வெற்றி அடைய வேண்டும் என, தெரிவித்தனர்.