2-ம் கட்ட பி.எட். அட்மிஷன்: 2 ஆயிரம் பேர் கவுன்சிலிங்குக்கு அழைப்பு

சென்னை: ஆசிரியர் வேலையில் சேர உதரவும் பி.எட். சேர்க்கைக்கான இரண்டாம் கட்டக் கவுன்சிலிங்குக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த 2-ம் கட்ட கவுன்சிலிங்கில் சுமார் 2 ஆயிரம் பேர் அழைக்கப்படவுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு, மானியம் பெறும் பி.எட். கல்லூரிகளில் மாணவ, மாணவிகள் சேர்க்கையை சென்னை விலிங்டன் சீமாட்டி கல்வியியல் நிறுவனம் நடத்தி வருகிறது.

அதன்படி பி.எட். முதல் கட்டக் கவுன்சிலிங் செப்டம்பர் 28-ஆம் தேதி தொடங்கி, அக்டோபர் 5-ஆம் தேதி வரை நடத்தப்பட்டது. மொத்தமுள்ள 1,777 இடங்களில் 1,000 இடங்கள் நிரம்பின.

மீதமுள்ள 777 இடங்களுக்கு அக்டோபர் 14, 15, 16-ஆம் தேதிகளில் கவுன்சிலிங் நடத்தப்பட உள்ளது.

இதற்கான அறிவிப்பு, குறைந்தபட்ச கட்-ஆஃப் உள்ளிட்ட விவரங்களை விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனத்தின் இணையதளத்தில் நேற்று வெளியிடப்பட்டது.

இந்தக் கவுன்சிலிங்குக்கு 2 ஆயிரம் பேர் வரை அழைக்கப்பட உள்ளனர் என பி.எட். சேர்க்கை செயலர் பாரதி கூறினார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Second phase Counselling for the B.ed course will be held in october. More than 2 thousand has been called for the counselling process by selection committee.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X