சென்னை: ஒடிஸா மாநிலம் ஐஐடி உயர்கல்வி நிறுவனத்தில் அடுத்த கல்வியாண்டுமுதல் கூடுதல் இடங்கள் உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.புவனேஸ்வர் ஐஐடி-யில் 8-வது நிறுவன நாள் விழா நேற்று நடைபெற்றது.
நிகழ்ச்சியில் ஒடிஸா மாநில முதல்வர் நவீன் பட்நாயக், ஐஐடி இயக்குநர்பேராசிரியர் ஆர்.வி. ராஜக்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.நிகழ்ச்சியில் ஆர்.வி. ராஜக்குமார் பேசியதாவது: அடுத்த கல்வியாண்டு முதல்ஐஐடி-யில் சேர்க்கை அதிகரிக்கப்படும். தற்போது 180 பேர்சேர்க்கப்பட்டுள்ளது. அடுத்த கல்வியாண்டு முதல் இது 260ஆகஅதிகரிக்கப்படும் என்றார் அவர்.
விழாவில் முதல்வர் நவீன் பட்நாயக் பேசியதாவது: ஒடிஸாவின் தலைநகர்புவனேஸ்வரில் போக்குவரத்து நிர்வாகம், கழிவுப் பொருட்கள் நிர்வாகம்,சுகாதாரம், பாதுகாப்பு, கண்காணிப்பு போன்ற விஷயங்களுக்கு ஐஐடி உதவவேண்டும்.
நாட்டின் பொலிவுறு நகரங்களில் பட்டியலில் புவனேஸ்வர் இடம்பெற்றுள்ளதால்புவனேஸ்வருக்கு நவீனத் தொழில்நுட்பங்களை அமைக்க ஐஐடி உதவவேண்டும் என்றார்அவர்.


Click it and Unblock the Notifications












