புதுடெல்லி: ஷிப்பிங் கார்ப்பொரேஷன் ஆஃப் இந்தியாவில் (எஸ்சிஐ) உதவி மேலாளர் பணியிடங்கள் காலியாகவுள்ளன.
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பங்களை தபால் மூலம் ஏப்ரல் 9-ம் தேதிக்குள் அனுப்பவேண்டும்.

மொத்தம் 15 உதவி மேலாளர் பணியிடங்கள் காலியாகவுள்ளன. இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க சட்டப்படிப்பில் பட்டப் படிப்பை முடித்திருக்கவேண்டும். மேலும் நிர்வாகம், வர்த்தகப் பிரிவில் மேலாண்மைப் படிப்பையும் முடித்திருக்கவேண்டும். ஏசிஏ அல்லது ஏஐசிடபிள்யூஏ படித்திருக்கலாம்.
சம்பளம் ரூ.20,600-46,500 என்ற அடிப்படையில் வழங்கப்படும். வயது 30-க்கு மிகாமல் இருக்கவேண்டும்.
எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர்.
இந்தப் பணியிடங்களுக்கு தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பங்களை P.O Box-2091, Chennai-600020 என்ற முகவரிக்கு அனுப்பவேண்டும். விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி ஏப்ரல் 9 ஆகும்.
பிரிண்ட் அவுட் விண்ணப்பங்கள் ஏப்ரல் 11-க்குள் வந்து சேரவேண்டும்.
கூடுதல் விவரங்களுக்கு http://www.shipindia.com/ என்ற இணையதள முகவரியை அணுகலாம்.


Click it and Unblock the Notifications












