அரசு பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்ததால் மாணவர்களுக்கு படுகாயம் ஏற்ப்பட்டுள்ளது . தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மாங்குடியை அடுத்த ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியின் சுற்றுச்சுவர் விழுந்து இரண்டு மாணவர்கள் படுகாய நிலையில் மருத்துவமணையில் சேர்க்கப்பட்டுள்ளனர் . இவ்வாறு தமிழகத்தில் பல பள்ளிகள் சரியான பராமரிப்பின்றி அவல நிலையில் உள்ளது .
சேலத்தில் மூளைவளர்ச்சி பாதிக்கப்பட்ட மாணவர்களுக்காக அமைக்கப்பட்ட டே கேர் செண்டர் கடந்த ஒருவருட காலமாக எந்தவித பாரமரிப்புமின்றி , அடிப்படை வசதிகளற்ற டேகேர் செண்டர் சேலத்தில் மாணவர்கள் பயில்கின்றனர் . இவ்வாறு தமிழ்நாட்டில் வசதி குறைந்த பல்வேறு பள்ளிகள் இயங்குகின்றன . இவற்றை அரசு கணக்கெடுத்து பள்ளிகளின் தரத்தை உயர்த்தி மாணவர்களுக்கு படிப்பற்கான நல்ல ஆரோக்கியமான சூழலை உருவாக்கித்தர வேண்டும் .
மாணவர்களுக்கு தேவையான தரமான வகுப்பறை, தண்ணிர் பற்றாக்குறையில்லாத மேலும் நல்லநிலையில் உள்ள கழிப்பறை மற்றும் மரங்கள் நிறைந்த காற்றோற்றமான வகுப்பறைகள் . பற்றாக்குறையில்லாத வகுப்பாசிரியர்கள் , திறமையை வெளிப்படுத்த தரமான மைதானம் . அடிப்படை திறன் கொண்ட பள்ளிக்கு தேவையான கணினி மற்றும் விளையாட்டு உபகரணங்கள் இவையே மாணவர்கள் எதிர்பார்ப்பது . வை-பை அடுத்தக்கட்ட வளர்ச்சியில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம், ஆனால் அரசு பள்ளிகளில் வை-பை என்ற அறிவித்த இந்நிலையிலும் அடிப்படை வசதிகளற்ற நிலையில் இயங்கும் பள்ளிகள் பல உள்ளன.
சார்ந்த தகவலகள் :
சேலத்தில் அடிப்படை வசதியின்றி தமிழக அரசின் டே கேர் செண்டர் மூளைவளர்ச்சி குன்றியோர்க்கான பள்ளி