சிறப்பாக பயிலும் மாணவர்களுக்கு மத்திய அரசு உதவிதொகையாக ரூபாய் 75000 வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது . மத்திய அரசு இதுதொடர்பாக விரைவில் உத்தரவிடதிட்டமிட்டுள்ளது . மத்திய அரசு சிறப்பு கண்டுபிடிப்புகள் மற்றும் சிறப்பாக கல்வி பயின்று புதிய படைப்புகளை கண்டுபிடிப்புகளை கொண்ட மாணவர்களுக்கு மத்திய அரசு மாதம் ரூபாய் 75 ஆயிரம் வழங்கதிட்டம்மிட்டுள்ளது .

இந்தியாவின் படைப்புகளை ஊக்குவிக்க இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தில் ஒரு அங்கமாக சிறப்பான படைப்பாற்றலை கொண்ட மாணவர்கள் வெளிநாடு செல்வதை தடுத்து அவர்களுக்கு ஆதரவு தரும் நோக்கத்தோடு செயல்ப்பட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது . ஐஐடி விழாவில் பேசிய மத்திய மேம்ப்பாட்டு துறை அமைச்சர் அவர்கள் மாதம்தோறும் மாணவர்கள் 1000 பேர்க்கு வழங்க அறிவித்தார் . இவ்வாறு சிறப்பாக செயல்படும் மாணவர்களுக்கு இவ்வளவு பெரிய அளவில் வழங்குவது இதுவே முதல்முறையாகும் .
இதுகுறித்து பேசிய மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ஜாவேத்கர் பிரகாஷ் நாட்டின் மனித ஆற்றலை நமதுநாட்டுகே பயன்படுத்த வேண்டும் அவர்களை அன்னிய தேசம் செல்வதை இது தவிர்க்கும் என்றார் மேலும் அவரது குறிப்பில் தன்னுடைய ஒப்புதலை தெரிவித்து மற்ற அமைச்சகங்களுக்கு அனுப்பிவிட்டதாகும் விரைவில் அனைத்து அமைச்சர்கள் சந்திப்பில் இதுகுறித்து பேசி சட்டமாக்கப்படும் . மாணவர்கள் திறன் மேம்படுத்தப்படும் என்றார் . மாணவர்களுக்கான உதவிதொகை குறித்து விரைவில் சட்டமாக்கப்படும்
உருவாக்கப்படும் இத்திட்டத்திற்கு பிரதமரின் கல்விஉதவிதொகை திட்டம் என பெயரிடப்பட்டுள்ளது . மாணவர்கள் வளம் அவர்களது திறன் இந்தியாவிற்கே பயன்படும் , இந்தியாவில் கல்வி பயிலும் பெண் மாணவர்களின் எண்ணிக்கை தற்பொழுது 8% சதவீகிதமாக இருக்கின்றது ஆனால் இனிவரும் காலங்களில் இது அதிகரிக்கும் என்றார் 2022க்கும் இந்தியாவில் மொத்தம் 20 % மேல் பெண்கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படும் . மேலும் விஷ்வஜித் திட்டத்தின் கீழ் மூன்று முக்கிய பணிகளை மத்திய அரசு ஏற்கனவே தொடங்கியது என்றார் .
சார்ந்தபதிவுகள்:


Click it and Unblock the Notifications












