பீடி சுரங்கப்ணியில் வேலை செய்வோரின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை பெறுவதற்கான வாய்ப்பை நன்கு அறிந்து கொள்ளலாம் . பீடி , சுரங்கப்பணி, திரைப்படத்துறையில் பணியாற்றும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு மத்திய அரசு தொழிலாளர் நலம் மற்றும் வேலைவாய்புத்துறையின் கீழ் அத்தகைய தொழிலாளர்களின் குழந்தைகள் கல்விஉதவி தொகை பெற உதவுகிறது .
பீடி, சுரங்கப்பணியாளர் பணிதொழிலாளர்களின் கல்விஉதவித் தொகைக்கு விண்ணப்பிக்க விண்ணப்பமானது பீடி தொழிலளர் நல மருந்தகங்களிலும் மாவட்ட துணை நல அலுவலகங்களிலும் கிடைக்கும். இந்த விண்ணப்பங்களைபெற்று மாணவர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து பள்ளிகளின் மூலம் அனுப்பலாம் .
திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களை சேர்ந்த மாவட்ட பீடிசுரங்க பணியாளகளின் பிள்ளைகள்
விண்ணப்பங்களை மாணவர்கள் அனுப்ப வேண்டிய முகவரி
துணை நல ஆணையர் ,
மத்திய தொழிலாளர் வேலைவாய்ப்பு அமைச்சகம்,
தொழிலாளர் நல அமைப்பு,
8/2 செயிண்ட் தாமஸ் ரோடு,
ஹை கிரவுண்டு ,
திருநெல்வேலி - 635810
தமிழ்நாட்டின் மற்ற மாவட்டங்களை சேர்ந்த மாணவர்களின் தங்களது விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி
தலைமை மருத்துவ அதிகாரி ,
பீடி தொழிலாளர் நலம் மருந்தகம்,
58/35 முகமது அலி முதல் தெரு,
பேர்ணாம்பட்டு, குடியாத்தம் வட்டம், வேலுர் மாவட்டம் 635810 .
மாணவர்களே உங்களுக்கான கல்விஉதவிதொகையைபெற முன்வாருங்கள் வருங்காலத்தில் உங்கள் கல்விதேவையை பூர்த்தி செய்து கொள்ளுங்கள் வாய்ப்பை பயன்படுத்துங்கள்.அரசு வழங்கும் இந்த உதவிதொகை விவரங்களை தெரிந்தவர்கள் தெரியாதவர்கள் அறிந்துகொள்ள உதவுங்கள் தேவையுள்ள மாணவர்களுக்கு உதவுங்கள் கல்விஎன்னும் ஒரு அழியா அறிவு தங்கு தடையின்றி பெற்று வாழ உதவுவோம் .
சார்ந்த பதிவுகள்:
சிறுபான்மையினர் மாணவர்கள் கல்விஉதவிதொகை பெற விண்ணப்பிக்க காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது