தேசிய மாற்றுதிறனாளிகளுக்கான முன்னேற்ற நடவடிக்கையில் மாற்றுதிறனாளி இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது . மேலப்படிப்பு படிக்கும் எவரும் இந்த உதவித் தொகையை பெற தகுதிவாய்ந்தவர் ஆவார் .
அங்கிகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் பிளஸ் 2 அல்லது அதற்கு நிகரான படிப்பை முடித்தவர்கள் குறைந்தது 2 ஆண்டுகள் மேல் படிப்பு படிக்க இந்த உதவித்தொகை வழங்கப்படும் . பிஇ மாணவர்கள் எனில் 2ஆண்டுகாலம் படித்திருக்க வேண்டும் அத்துடன் இரண்டு ஆண்டுகாலம் கல்வி உதவித்தொகை பெற கால அளவு இருக்க வேண்டும் .
இரண்டாவது ஆண்டு உதவித்தொகை பெற மாணவர்களுக்கு முதல் ஆண்டு பெறும் தேர்ச்சி விகிதம் அறிவிக்கப்பட வேண்டும் . கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் வேறு எந்த கல்வித்தொகை பெற விண்ணப்பித்திருக்க கூடாது .
விடுதியில் தங்கி படிக்கும் மாணவராக இருப்பின் மாதந்தோறும் ரூபாய் 1000 பெறலாம் . வீட்டில் தங்கி படிக்கும் மாணவராக் இருப்பின் மாதம் ரூபாய் 700 தொகை பெறலாம் . உடல் ஊனமுற்றோர்களுக்கான இந்த உதவித்தொகை பெறும் வாய்ப்பை உங்களது நண்பர் மற்றும் உறவினர்கள் தெரிந்தவர்களுக்கு அறிவிக்கவும் .
அங்கிகரிக்கப்பட்ட இந்த கல்வி உதவித்தொகையை பெற அதிகாரப்பூர்வ இணைப்பை வழங்குகிறோம் . தேசிய மாற்றுதிறனாளிகளுக்கான ஒரு அரிய வாய்ப்பு விவரம் அனைவருக்கும் கொண்டு சேர்ப்போம் . ஆதரவு பெற்று அவர்கள் படிக்க நாமும் உந்துதலாக இருப்போம்.
சார்ந்த பதிவுகள்:
மௌலானா கல்வி உதவித்தொகை பெற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்