சென்னை : பொதுத்துறை வங்கிகளில் முன்னணி வகிக்கும் வங்கிகளில் ஒன்று ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (எஸ்.பி.ஐ) அதிகமான கிளைகளுடன் பரந்த வங்கிச் சேவையை வழங்கி வரும இந்த வங்கியில் தற்போது சிறப்பு நிர்வாக அதிகாரி பணியிடங்களை நிரப்பும் அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 554 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். பணிப்பிரிவு மற்றும் இட ஒதுக்கீடு அடிப்படையிலான பணியிட விவரங்களை இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
கல்வித் தகுதி
சி.ஏ, .ஐ.சி.டபுள்யு.ஏ, ஏ.சி.எஸ், எம்.பி.ஏ போன்ற பிரிவு படிப்பு படித்தவர்களுக்கு பணிகள் உள்ளன. குறிப்பிட்ட ஆண்டுகள் பணி அனுபவம் கோரப்பட்டு உள்ளது.
வயது வரம்பு
விண்ணப்பதாரர்கள் 31.03.2017ந் தேதியில் 40 வயதுக்கு உட்பட்டவர்கள் கிரேடு (ஸ்கேல்) 3 பணிகளுக்கும், 35 வயதுக்கு உட்பட்டவர்கள் கிரேடு (ஸ்கேல்) 2 பணிகளுக்கும் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யும் முறை
ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்காணல், குழு கலந்துரையாடல் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை
விருப்பமும், தகுதியும், உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். பின்னர் கட்டணம் செலுத்த வேண்டும். அடுத்ததாக புகைப்படம் மற்றும் கையொப்பத்தை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும். இறுதியில் பூர்த்தியான விண்ணப்பத்தை சொந்த உபயோகத்திற்காக கணினிப் பிரதி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
விண்ணப்பிக்க கடைசி நாள் - 18 .05. 2017ந் தேதி
மேலும் விரிவான விபரங்களைப் பெற www.sbi.co.in/careers என்ற இணையதள பக்கத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications












