சென்னை : பாரத ஸ்டேட் வங்கி நடத்தும் புரபேஷனரி அதிகாரிப் பணிக்கான எழுத்துத் தேர்வு நடை பெற உள்ளது. இந்த தேர்விற்கான விண்ணப்பங்கள் கடந்த 6ம் தேதி வரை பெற்றுக் கொள்ளப்பட்டன.
பாரத ஸ்டேட் வங்கி அதிகாரி தேர்வினை சிறப்பாக எழுதுவதற்கு பயிற்சி வகுப்புகள் ஏப்ரல் 5ம் தேதியில் இருந்து ஏப்ரல் 19ம் தேதி வரை திருச்செந்தூர் சிவந்தி அகடாமியில் நடைபெற உள்ளது.
பயிற்சிக் கட்டணம் -
பயிற்சி வகுப்பிற்கான கட்டணமாக ரூ. 3000/- வசூலிக்கப்படுகிறது. பயிற்சி வகுப்புகள் நடைபெறும் தேதிகளில் பயிற்சி வகுப்புகளில் சேருபவர்கள் எக்காரணத்தைக் கொண்டும் விடுப்பு எடுக்க அனுமதிக் கிடையாது. ஏப்ரல் 5ம் தேதியில் இருந்து ஏப்ரல் 19ம் தேதி வரை பயிற்சி வகுப்புகள் நடைபெறும்.
விடுதி வசதி -
பயிற்சியில் கலந்த கொள்ளும் ஆண்கள், டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி ஆண்கள் விடுதியிலும், பெண்கள் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி பெண்கள் விடுதியிலும் தங்குவதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது. விடுதியில் தங்கி படிக்க விருப்பம் உள்ளவர்கள் பயிற்சி நடக்கும் முதல் நாளான ஏப்ரல் 5ம் தேதி விடுதிக் கட்டணம் ரூ. 3000/- செலுத்த வேண்டும். மூன்று நேர உணவிற்கும் சேர்த்தே கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
பயிற்சி வகுப்பில் சேரும் மாணவர்களுக்கான தகவல்கள்
பயிற்சி வகுப்பில் சேர விரும்புபவர்கள் ஒரு வெள்ளைத்தாளில் போட்டோ ஒட்டி பெயர் பின் கோடுடன் கூடிய முகவரி, இமெயில், தொலைபேசி எண் ஆகியவற்றைக் குறிப்பிடவும். மற்றும் விடுதி வசதி தேவைப்படுபவர்கள் அதில் விடுதி வசதி தேவை என்பதை தெரிவிக்க வேண்டும். அத்துடன் ரூ, 3000/- கான டிமாண்ட் டிராப்ட் (கனரா வங்கி, ஐ.ஓ.பி ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, இந்தியன் வங்கி) சிவந்தி அகடாமி திருச்செந்தூர் என்ற பெயரில் எடுத்து கீழ் உள்ள முகவரிக்கு அனுப்பவும்.
அனுப்ப வேண்டி முகவரி
சிவந்தி அகடாமி,
தூத்துக்குடி ரோடு,
திருச்செந்தூர் - 628216 என்ற முகவரிக்கு 31.03.2017ம் தேதிக்கும் அனுப்பவும்.
முக்கியக் குறிப்புகள் -
பயிற்சிக் கட்டணம் மற்றும் விடுதிக்கட்டணம் ஆகியவை திருப்பித்தரபட மாட்டாது என சிவந்தி அகாடமி ஒருங்கிணைப்பாளர் பி.முத்தையா ராஜ் தெரிவித்துள்ளார்.
தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் - 04639 - 2429998, 9442055243, 8682985148 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு மேலும் விபரங்களைத் தெரிந்து கொள்ளலாம்.