சென்னை: ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின்(எஸ்பிஐ) துணை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் பிகானீர் & ஜெய்ப்பூர் வங்கியில் துணைப் பொது மேலாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
சட்டப் பிரிவில் இந்தப் பணியிடம் காலியாக உள்ளதாக வங்கி தெரிவித்துள்ளது. இந்த பதவிக்கு ரூ.68680-1960x4-76520 என்ற அடிப்பயில் சம்பளம் வழங்கப்படும்.
இந்தப் பதவிக்கு சட்டப் பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்கவேண்டும்.
செப்டம்பர் 30-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பவேண்டும். வயது 35 முதல் 55 வயதுக்குள்ளாக இருக்கவேண்டும்.
எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் பதவிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். ஆன்-லைனில் மட்டுமே இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கவேண்டும். விண்ணப்பக் கட்டணமாக ரூ.600 வசூலிக்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு http://www.sbi.co.in/portal/web/home/careers-with-us என்ற இணையதள லிங்க்கைத் தொடர்புகொள்ளலாம்.