சங்கர் ஐஏஎஸ் அகாடமியின் சார்பில் சென்னை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் வரும் நவம்பர் 4ம் தேதியன்று குரூப்-2 மாதிரித் தேர்வு நடைபெறவுள்ளது. இது முற்றிலும் இலவசமாக நடத்தப்படும் தேர்வாகும்.
இதுகுறித்து சங்கர் ஐஏஎஸ் அகாடமி சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :-
தமிழ்நாடு மாநிலப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் 2018 நவம்பர் 11ம் தேதியன்று குரூப்-2 தேர்வு நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு சங்கர் ஐஏஎஸ் அகாடமியின் சார்பில் சென்னை, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, வேலூர், சேலம், கோவை, ஈரோடு, நாமக்கல், திருச்சி, தஞ்சாவூர், மதுரை, திருநெல்வேலி, பழனி, கடலூர் என மொத்தம் 14 மாவட்டங்களில் குரூப்-2 இலவ மாதிரித் தேர்வு நவம்பர் 4ம் தேதியன்று நடைபெற உள்ளது.
இத்தேர்வில் பங்கேற்க விருப்பமுடைய மாணவர்கள் www.shankariasacademy.com அல்லது 044 43533445, 044 45543082 ஆகிய தொலைப்பேசி எண்களுக்குத் தொடர்பு கொண்டு விபரங்களை அறிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நண்பர் வீட்டில் அழகானப் பெண் கதவைத் திறக்கிறார்! நீங்கள் என்ன செய்வீர்கள்? இன்டர்வியூ கேள்விகள்!