ராணுவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது என மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-
டேராடூனில் செயல்பட்டு வரும் ராஷ்ட்ரிய இந்திய இராணுவக் கல்லூரியில் 2020-ஆம் ஆண்டு ஜனவரியில் தொடங்கும் 8-ஆம் வகுப்புக்கான சேர்க்கை நடைபெறுகிறது. இதற்கான தகுதித் தேர்வு வரும் ஜூன் 1, 2-ஆம் தேதிகளில் நடைபெறும். 7-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அல்லது படித்துக் கொண்டிருக்கும் பதினொன்று அரை முதல் 13 வயது நிரம்பிய மாணவர்கள் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.
விண்ணப்பிக்க விரும்பும்வோர் விளக்கவுரை மற்றும் முந்தைய ஆண்டுகளில் நடத்தப்பட்ட தேர்வுகளின் கேள்வித் தாள்களை கட்டணம் செலுத்தி எழுத்து மூலமாக விண்ணப்பம் செய்து பெற்றுக்கொள்ளலாம். குறிப்பாக, தனியாக அச்சடிக்கப்பட்ட அல்லது நகல் எடுக்கப்பட்ட விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
விண்ணப்பக் கட்டணமாக பொதுப் பிரிவினர் விரைவுத் தபாலில் பெற ரூ.600, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் ரூ.555 வீதம் சாதிச் சான்றுடன் அனுப்பி விண்ணப்பப் படிவம் மற்றும் முந்தைய ஆண்டுத் தேர்வுகளின் விடைத் தாள்களையும் பெற்றுக் கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் இம்மாத இறுதிக்குள் சென்றடைய வேண்டும். எழுத்துத் தேர்வு ஆங்கிலம் அல்லது இந்தியில் மட்டுமே நடைபெறும். தேர்ச்சி பெறுவோருக்கு கல்வி நிதி உதவியாக ஆண்டுக்கு ரூ.40 ஆயிரம் வழங்கப்படும்.
இதில், விண்ணப்பிக்க விரும்புவோர் மேலும் விவரங்களை அறிய ராஷ்ட்ரிய இந்திய இராணுவ கல்லூரியின் www.rimc.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணைய தள முகவரியினை கிளிக் செய்யவும்.