சென்னை: லிகோ - இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக மெட்ராஸ் ஐஐடி வளாகத்தில் புதியதோர் அதிநவீன ஆராய்ச்சிக் கூட்டம் அமைக்கப்படவுள்ளது.
ஐஐடி மெட்ராஸுக்குச் சொந்தமான மற்றொரு வளாகம் வண்டலூர் பகுதியில் அமைந்துள்ளது. இந்த வளாகத்தில்தான் இந்த புதிய அதிநவீன ஆய்வுக் கூட்டம் அமையவுள்ளது.
ஐஐடி-எம் பேராசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் உதவியுடன் இந்த அதிநவீன ஆராய்ச்சிக் கூடம் அமையவுள்ளது. இந்து 2023-ல் செயல்படத் தொடங்கும் என்று தெரியவந்துள்ளது.
தி லேசர் இன்டர்பெரோமீட்டர் கிராவிடேஷன்-வேவ் ஆப்சர்வேட்டரி இன் இந்தியா (லிகோ-இந்தியா திட்டம்) திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை பிப்ரவரி 17-ம் தேதி ஒப்புதல் அளித்தது. இதைத் தொடர்ந்தே இந்த அதிநவீன ஆய்வுக் கூடம் அமைக்கும் பணியைத் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
ஐஐடி-எம் பேராசிரியர் அனில் பிரபாகர் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார். இந்த அதிநவீன ஆய்வுக் கூடம், ஆராய்ச்சி மாணவர்களும், பேராசிரியர்களும் மிகவும் உபயோகமாக இருக்கும் என்றார் அவர்.