சென்னை: இளம் பட்டதாரிகளுக்கு இந்திய மின்தொகுப்பு கழகம்(பவர் கிரிட் கார்ப்பரேஷன் நிறுவனம்) வேலைவாய்ப்பு காத்திருக்கிறது.
பொதுத்துறை நிறுவனங்களில் நவரத்னா விருதைப் பெற்றுள்ள நிறுவனம் பவர் கிரிட் கார்ப்பரேஷன். மத்திய மின்துறை அமைச்சகத்தின் கீழ் இயக்கி வருகிறது. இந்த நிலையில் பவர் கிரிட் கார்ப்பரேஷனின் பவர் சிஸ்டம் ஆப்பரேஷன் கார்ப்பரேஷனில் (போசோக்கோ) இளம் பட்டதாரிகளை வேலைக்குச் சேர்க்கவுள்ளது இந்த நிறுவனம்.
செப்டம்பர் 16-ம் தேதிக்குள் நிறுவனத்தின் இணையதளத்துக்குச் சென்று ஆன்லைனில் விண்ணப்பங்களை அனுப்பலாம். ஆகஸ்ட் 19-ம் தேதி முதலே விண்ணப்பங்களை அனுப்புவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
எம்.டெக், எம்எஸ், எம்இ, எம்.எஸ்சி (என்ஜினீயரிங்) உள்ளிட்ட படிப்புகளைப் படித்தவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பம் செய்யலாம். 28 வயதுக்குள்பட்டவர்கள் மட்டுமே இதற்கு விண்ணப்பம் செய்ய முடியும். எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர்.