சென்னை: என்ஜினீயர்களுக்கு நெய்வேலி அனல்மின்நிலையத்தில் வேலைவாய்ப்புக் காத்திருக்கிறது.
தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் என்எல்சி-யில் விண்ணப்பிக்கலாம்.
தமிழகத்தின் கடலூர் மாவட்டம் நெய்வேலியில் செயல்பட்டு வரும் இந்த அரசு பொதுத்துறை நிறுவமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி கழக நிறுவனத்தின் பல்வேறு துறைகளில் 100 நிர்வாக என்ஜினீயர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன.
இதற்கு பொறியியல் துறையில் பி.இ அல்லது பி.டெக். முடித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன், சிவில். Instrumentation, Electronics & Instrumentation,Instrumentation and Control, கம்ப்யூட்டர், மைனிங், இன்பர்மேசன் டெக்னாலஜி போன்ற பிரிவுகளில் பொது பிரிவினர் 60 சதவீத மதிப்பெண்களுடனும்,
எஸ்சி.,எஸ்டி., ஒபிசியினர் 50 சதவீத மதிப்பெண்களுடனும் பி.இ அல்லது பி.டெக் மற்றும் கம்ப்யூட்டர் அப்ளிகேசன்ஸ் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம் மாதம் ரூ.20,600 - 46,500 வரை கிடைக்கும்.
கேட்-2016 தகுதித் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
www.nlcindia.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்-லைனில் விண்ணப்பித்த பின்னர் ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட்டை
The General Manager (HR), Recruitment Cell, Human Resource Department, Neyveli Lignite Corporation Limited, Corporate Office, Block-1, NEYVELI- 607 801.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான ஜனவரி 22-ம் தேதி கடைசி தேதியாகும். ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர ஜனவரி 29-ம் தேதி கடைசி நாளாகும். மேலும் விவரங்களுக்கு www.nlcindia.com என்ற இணையதளத்தை காணலாம்.