சென்னை: இந்திய ரிசர்வ் வங்கியில் அலுவலர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியில் கிரேட் பி பிரிவில் 134 பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. இந்தப் பணியிடங்களுக்கு அக்டோபர் 23-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 10, 12-வது முடித்து பட்டப்படிப்பில் 60 சதவீத தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருந்தால் போதுமானது.
வயது 21-க்குள் இருந்து 30-க்குள் இருக்கவேண்டும். எம்.பில் படித்தவர்களுக்கு 32 வயதும், பிஎச்.டி. முடித்தவர்கள் 34 வயதும் தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த பணியிடத்துக்கானத் தேர்வு ஆன்-லைன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் இருக்கும்.
முதல் கட்டத் தேர்வு ஆன்-லைனில் இருக்கும். 200 மதிப்பெண்களுக்கான இந்தத் தேர்வு நவம்பர் 21, 22 தேதிகளில் நடைபெறும். இதைத் தொடர்ந்து 2-வது கட்டத் தேர்வு நடைபெறும்.
இதில் வெற்றி பெற்று தேர்வானவர்கள் விவரம் வெளியிடப்படும்.
விண்ணப்பங்களை அனுப்ப கடைசி தேதி அக்டோபர் 23 ஆகும். முதல் கட்டத் தேர்வு நவம்பர் 21, 22-ம் தேதிகளிலும், 2-ம் கட்டத் தேர்வு டிசம்பர் 7-ம் தேதியும் நடைபெறும்.
மேலும் விவரங்களுக்கு https://www.rbi.org.in என்ற இணையதள முகவரியைப் பார்க்கலாம்.