சென்னை: சென்னையிலுள்ள சிபிஎஸ்இ பள்ளிகளில் சேர வசதியாக விரைவில் பொதுவான ஆன்-லைன் விண்ணப்பத்தைக் கொண்டு வரும் முயற்சியில் பள்ளிகள் இறங்கியுள்ளன.
சென்னையிலுள்ள சிபிஎஸ்இ பள்ளிகளில் தங்களது குழந்தைகளைச் சேர்ந்த பெற்றோர் நீண்ட வரிசையில் நின்று விண்ணப்பங்களைப் பெற வேண்டியுள்ளது. இந்த நிலையைத் தவிர்க்க நகரிலுள்ள 100 சிபிஎஸ்இ பள்ளிகள் பொதுவான ஆன்-லைன் விண்ணப்பத்தைக் கொண்டு வருவதற்கான முயற்சியில் இறங்கியுள்ளன.
இதுகுறித்து பவன்ஸ் ராஜாஜி வித்யாஷ்ரம் பள்ளியின் மூத்த முதல்வர் அஜீத் பிரசாத் ஜெயின் கூறியதாவது: விரைவில் இந்த ஆன்-லைன் விண்ணப்பத்தைக் கொண்டு வரவுள்ளோம். அதற்கான தீவிரமான பணிகளில் ஈடுபட்டுள்ளன.
சிபிஎஸ்இ கிளஸ்டரில் வரும் 100 பள்ளிகளை இதில் சேர முடிவு செய்துள்ளோம்.
இதுதொடர்பாக அந்தப் பள்ளி நிர்வாகங்கள், முதல்வர்கள், பள்ளி உறுப்பினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.
எங்கள் பள்ளியில் ஆன்-லைன் அப்ளிகேஷன் முறையை கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் துவங்கினோம். இதற்கு நல்ல வரவேற்பு உள்ளது. ஆண்டுக்கு 1,400 பேர் ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்கின்றனர் என்றார் அவர்.


Click it and Unblock the Notifications












