சென்னை: ஒடிஸா மாநிலத்தில் உதவி ஆர்க்கிடெக்ட் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.
இந்தப் பணியிடங்களுக்கான தேர்வை ஒடிஸா மாநில பொதுப் பணித் தேர்வாணையம்(ஓபிஎஸ்சி) நடத்தவுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் மார்ச் 14-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பவேண்டும்.
மொத்தம் 4 உதவி ஆர்க்கிடெக்ட் பணியிடங்கள் காலியாகவுள்ளன.
ஆர்க்கிடெக்ச்சர் பிரிவில் பட்டப்படிப்பு அல்லது பட்டயப் படிப்புகளை முடித்திருக்கவேண்டும். வயது 21-க்குக் குறையாமலும், 32-க்கு மிகாமலும் இருக்கவேண்டும்.
கூடுதல் விவரங்களுக்கு http://www.opsc.gov.in என்ற இணையதளத்தைத் தொடர்புகொள்ளலாம்.
தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பங்களை மார்ச் 14-ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்யவேண்டும். இதற்கான விண்ணப்பக் கட்டணம் பொதுப் பிரிவினருக்கு ரூ.200 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்குக் கட்டணம் கிடையாது.
தேர்வு செய்யப்படும் நபர்கள் குறித்த விவரம் ஓபிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்படும்.