வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்கத் தவறிவிட்டீர்களா ? மீண்டும் வாய்ப்பளிக்கும் தமிழக அரசு!

வேலை வாய்ப்பு பதிவினை புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் பதிவினை புதுப்பிக்க வாய்ப்பளிக்கப்படுவதாகத் தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சித் துறை முதன்மைச் செயலாளர் சுனில் பால

வேலை வாய்ப்பு பதிவினை புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் பதிவினை புதுப்பிக்க வாய்ப்பளிக்கப்படுவதாகத் தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சித் துறை முதன்மைச் செயலாளர் சுனில் பாலிவால் தெரிவித்துள்ளார்.

வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்கத் தவறிவிட்டீர்களா ? மீண்டும் வாய்ப்பளிக்கும் தமிழக அரசு!

வேலை வாய்ப்பு அலுவலக பதிவினை 2011 முதல் 2016-ஆம் ஆண்டு வரை புதுப்பிக்கத் தவறியவர்களுக்குச் சிறப்பு புதுப்பித்தல் சலுகை வழங்கலாம் என்று வேலை வாய்ப்பு பயிற்சித் துதறை ஆணையர் சார்பில் அரசுக்குப் பரிந்துரை செய்யப்பட்டது.

அதன்படி, 2011 முதல் 2016-ஆம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி வரையில் வேலை வாய்ப்பு அலுவலகப் பதிவினை புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சலுகையினைப் பெற விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசாணை வெளியிடப்படும் நாளில் இருந்து (2018 அக்டோபர் 25) மூன்று மாதங்களுக்குள் இணையம் மூலமாக தங்களது பதிவினை புதுப்பித்துக் கொள்ள வேண்டும். இந்தச் வாய்ப்பு ஒரு முறை மட்டுமே வழங்கப்படும்.

மூன்று மாதங்களுக்குப் பிறகு பெறப்படும் கோரிக்கைகள் நிராகரிக்கப்படும். 2011ஆம் ஜனவரி 1ம் தேதிக்கு முன் புதுப்பிக்கத் தவறியவர்களின் கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Opportunity For Renewal Of Employment Registration
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X